நீடாமங்கலம்- மினிபோர் நீர் தேக்க தொட்டி திறப்பு விழா-செய்தி
நீடாமங்கலம் ஒன்றியம் பெரம்பூர் ஊராட்சி கண்ணம்பாடி காளியம்மன் கோவில் அருகே மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி ராணி சுந்தர் அவர்கள் பரிந்துரையரில் மாவட்ட ஊராட்சி பொது நிதி ரூ 4லட்சத்து 26ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள மினிபோர் நீர் தேக்க தொட்டி திறப்பு விழா இன்று 22/04/2023 சனிக்கிழமை காலை 10மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் திரு கே.வி.கே.ஆனந்த் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி ராணி சுந்தர் ஒன்றியக்குழு உறுப்பினர் திரு க.பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பெருந்தலைவர்
திரு சோம.செந்தமிழ்ச்செல்வன்மினி போரினை திறந்து வைத்தார்.மேலும் வடகாரவாயல் ஊராட்சி தலைவர் விக்னேஷ், பெரம்பூர் செயலாளர் அறிவு, ஊராட்சி துணை தலைவர் பெத்தபெருமாள், மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், முன்னோடிகள் பங்கேற்றனர். அரசு செய்திக்காக நீடாமங்கலம் எஸ் சுரேஷ்