நீடாமங்கலம்–பள்ளிகளில் மகளிர் தின விழா
நீடாமங்கலம் ஒன்றியம் கப்பலுடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகளிர் தின விழா பள்ளி தலைமை ஆசிரியை உமையாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் சைலஜா, சித்ரா கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் எஸ் நேரு துணைத்தலைவர் ராஜா, செல்வராஜ் , செயலாளர் ஜெகதீஷ் பாபு பொருளாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் ஞானசேகரன், வீரசிங்கம்,எஸ் எம் சி உறுப்பினர் சேகர், வானவில் மன்ற பொறுப்பாளர் ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் சிறப்புகள் பற்றி பேசினார்கள். பள்ளியில் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் வழங்கப்பட்டு, மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதேபோன்று நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் இலக்குமிவிலாச நடுநிலைப்பள்ளி, மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி களில் உள்ள பெண் ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டு பயனுள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் புகையை ஒழிப்போம் எனும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது