fbpx
Others

நீடாமங்கலம் — பல்நோக்கு சேவை இயக்கம்–சிறப்பு செய்தி

நீடாமங்கலம்பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான நீர் மேலாண்மை கண்டுணர் பயணம் ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி, அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்களை நீடாமங்கலம் மூன்றாம் தலைப்பு பகுதிக்கு அழைத்து சென்றனர். ஒருங்கிணைப்பாளர் நேரு தலைமை வகித்தார். உறுப்பினர் செல்வராஜ் முன்னிலையேற்றார்.நீர் மேலாண்மை பற்றியும், நீர் மாசுபாட்டை தடுத்தல் பற்றியும் செயலாளர் ஜெகதீஸ் பாபு விளக்கமாக உரையாற்றினார். சமூக ஆர்வலர் ஜெயக்குமார் நீர் சேமிப்பு முறைகளை பற்றி உரையாற்றினார். துணைத் தலைவர் செல்வராஜ், வரவேற்புரையாற்ற, உறுப்பினர் சுரேஸ் நன்றியுரையாற்றினார். இப்பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close