நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி
தேசிய வருவாய் வழிகல்வி உதவித்தொகை திட்டத் திறனறித் தேர்விற்கான வினா விடை கையேடு வழங்கல்
எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் NMMS போட்டி தேர்வை சிறந்த முறையில் எழுதிடும் நோக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரிய வல்லுனர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினா விடைகள் அடங்கிய கையேடு நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்சிக்கு இயக்கத்தின் தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வராஜ் செயலாளர் ஜெகதீஷ் பாபு முன்னிலை வகித்தனர். கௌரவத்தலைவர் சந்தான ராமன் செயற்குழு உறுப்பினர் இளவழகன், ரமேஷ் ஆகியோர் கையேடுகள் வழங்கி மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக தலைமை ஆசிரியை தேவி லட்சுமி வரவேற்றார் ஆசிரியர் சிங்கார கஸ்தூரிபாய் நன்றிஉரையாற்றினார்