fbpx
Others

நீடாமங்கலம் – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சிறப்பு செய்தி

நீடாமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியின்போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீ தொண்டு நாளை முன்னிட்டு மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு வடிவேல் அவர்கள் உத்தரவுப்படி மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நீடாமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு பிரச்சாரம் நடைபெற்றது நீடாமங்கலம் தீயணைப்பு அலுவலர் அ-கார்த்திகேயன் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர்கள் மீ- பார்த்திபன், பா- பாலமுருகன் ஆகியோர் பணிகளை மேற்கொண்டனர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஆர் ராஜசேகரன் அவர்கள் முதல் பிரசுரத்தை பெற்றுக் கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close