Others
நீடாமங்கலம்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஐம்பெரும் விழா நீடாமங்கலம் மல்லிகை மண்டபத்தில் வட்டார தலைவர் தர்மராஜ் அவர்கள் தலைமையிலும் வட்டார செயலாளர் தமிழரசன் முன்னிலையிலும் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஈவேரா பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மோதிரம் அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் பாராட்டி பேசினார் ஆசிரியர் இயக்கத்தை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் தலைவர் பத்மஸ்ரீ ராமன் செயலர் ஜெகதீஷ் பாபு ஒருங்கிணைப்பாளர் நேரு துணைத்தலைவர்கள் ராஜா மற்றும் செல்வராஜ் ஆகியோர்களை ஆசிரியர் இயக்கத்தின் சார்பில் கௌரவப்படுத்தினர்.