ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
70 வயது மூதாட்டி… கொரோனா நோயாளி…! ஆனா தற்கொலை…!
Corona patient suicide in Chennai
சென்னை:
சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகம்.
இந் நிலையில் சென்னையில் மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். 70 வயது மூதாட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
செங்குன்றம் பகுதியை சேர்ந்த அவர் திடீரென மாயமானதால் போலீசார் அவரை தீவிரமாக தேடியதாகவும் கூறப்படுகிறது.இந் நிலையில் மூதாட்டி கழிவறையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அந்த மூதாட்டியின் மரணம் தற்கொலையா? மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.