fbpx
Others

நீடாமங்கலம்—சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்..

நீடாமங்கலம் பல் நோக்கு இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் தலைவர் பத்மஸ்ரீராமன் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் நேரு துணைத் தலைவர்கள் செல்வராஜ், ராஜா முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் செயலாளர் ஜெகதீஸ் பாபு சுற்றுச்சூழலை பாதிக்கும் பல்வேறு காரணிகளை விளக்கமளித்தார். சுற்றுச்சூழல், வேளாண்மை , உணவு நஞ்சாதல் தொடர்பாக சமூக ஆர்வலர் செந்தில்குமார் அவர்கள் கருத்து வழங்கினார். உறுப்பினர்கள், நமச்சிவாயம், செல்வராஜ், செந்தில்நாதன், ரவிச்சந்திரன், ராஜேஷ்குமார், Sri ராம், ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் அன்பில் தர்மலிங்கம், ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என கருத்து தெரிவித்தனர். நூலகர் ராகவன் வரவேற்புரையாற்ற, ஆசிரியர் சிவக்குமார் நன்றியுரையாற்றினார்.விழாவில் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close