நீடாமங்கலம்–சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி..
வட்டார அளவிலான பள்ளிகளில் சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி
மாணவர்களிடையே இந்திய சுதந்திரப் போராட்டத்தை பற்றியும் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கத்தில்
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது வட்டார கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ளகப்பலுடையான் வடகர வயல்,தென்கரவயல் ரிஷியூர் முல்லைவாசல் பொதக்குடி சேகரை தேவங்குடி காளாச்சேரி வடுவூர் தென்பாதி, நல்லிக்கோட்டை கருவாக்குறிச்சி காலனி, வடக்கு தோப்பு, மூவர் கோட்டை, சீனிக்குடிகாடு, சோனா பேட்டை, செருமங்கலம், மேலப்பூவனூர், சித்தமல்லி, நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற 75 மாணவர்களுக்கு பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் சுற்றுச்சூழல் அமைப்பு ஏற்படுத்தி சுற்றுச்சூழல் மேம்பட விழிப்புணர்வு செய்யப்பட்டது பரிசளிப்பு நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ,தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள், பல்நோக்கு சேவை இயக்க உறுப்பினர்கள் பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.