நீடாமங்கலம்- கப்பலுடையான் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வில்லுப்பாட்டு.
77 வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம் வட்டாரம் கப்பலுடையான் பள்ளியில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்பு ஏற்படுத்தி மாசுபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும், சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி என்ற தலைப்பில்மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது..நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை உமையாள் தலைமைதாங்கினார்ஆசிரியர்கலைச்செல்வி, முன்னிலை வகித்தார் பல்நோக்கு சேவை இயக்கத்தின் கௌரவத்தலைவர் சந்தான ராமன் பொருளாளர் ரவிச்சந்திரன் துணைத் தலைவர்கள் ராஜா, செல்வராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சுற்றுச்சூழல் அமைப்பினைத் தொடங்கிவைத்தனர்.முன்னதாக ஆசிரியர் ஷைலஜா வரவேற்புரை ஆற்றினார் ஆசிரியர் ஞானசேகரன் நன்றியுரையாற்றினார்.விழாவில் பள்ளி மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது..