fbpx
Others

 நீடாமங்கலம்–ஊராட்சி ஒன்றிய  அலுவலக கட்டிடம்அடிக்கல்விழா

 நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய  அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர்  டி ஆர் பி ராஜா அடிக்கல் நாட்டினார் இதற்கான நிகழ்ச்சி ஒன்றிய குழு தலைவர் சோ செந்தமிழ் செல்வன் தலைமையில் 5/10/22   புதன்கிழமை நடைபெற்றது. நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா. மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம்  கோ பாலசுப்ரமணியம் ஒன்றிய தலைவர் ஒன்றிய துணைத் தலைவர்  ரா ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் டி எஸ் டி முத்துவேல் மாவட்ட வளர்ச்சி குழு உறுப்பினர்கள் வழக்குறிஞர் நா.கவியரசு கே வி கே ஆனந்த் வை.மாயவந்தன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ராணி சுந்தர் சங்கீதா  செல்வேந்திரன் கலைவாணி மோகன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அண்ணா திமுக ஆதிஜனகர் இந்திய கம்யூனிஸ்ட் கா பாலா பாரதி மோகன்தமாக கார்த்திகேயன் திமுக நடன சிகாமணி ஒன்றிய குழு உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக ஒன்றிய ஆணையர் ரா.சுப்பிரமணியன் வரவேற்றார் , நிறைவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் நன்றி கூறினார் (.ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் கட்டுவதற்கு ரூபாய் மூன்று கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது )

Related Articles

Back to top button
Close
Close