Others
நீடாமங்கலம்தில் அண்ணா நினைவு நாள்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ஒன்றிய, பேரூர் தி.மு.க. சார்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.இராசமாணிக்கம் தலைமையில் பெரியார் சிலையில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன்,ஒன்றிய செயலாளர்கே.வி.கே.ஆனந்த், பேரூர் செயலாளர்
இரா.இராஜசேகரன், ஒன்றிய முன்னாள் செயலாளர் விசு.அண்ணாதுரை,
ஒன்றிய முன்னாள் பொறுப்பாளர் சி.கோபாலகிருஷ்ணன், பேராட்சித் தலைவர்
ஆர்.ஆர்.ராம்ராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி ராணி சேகர்,
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி ராணி சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணியின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் முன்னோடிகள் பங்கேற்றனர்..