Others
நாள் தவறாமல் மாணவர்களுடன் வகுப்பை கவனிக்கும் குரங்கு……!
-
குரங்கு ஒன்று பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து வகுப்புகளில் பாடம் கவனிக்கும் சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள துனா என்ற கிராமத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சமீப காலமாக வினோத சம்பவம் நடைபெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பள்ளிக்கு கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று வருகை தந்து மாணவர்களுடன் அமர்ந்து வகுப்பை கவனித்து வருகிறது. இந்த குரங்கு மாணவர்களுடன் அமர்ந்து வகுப்பை கவனிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் ரதன் வர்மா கூறுகையில், காலை 9 மணிக்கு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும் நேரத்தில் இந்த குரங்கும் வந்துவிடுகிறது. வகுப்பறையில் அமர்ந்து வகுப்புகளை கவனிப்பதோடு மட்டுமல்லாது, மாலை அனைத்து வகுப்புகளும் முடிந்த பின் மாணவர்கள் வீட்டிற்கு செல்லும் போது தான் இந்த குரங்கும் திரும்பி போகிறது என்கிறார் ஆச்சரியத்துடன். ஆசிரியர்கள் விரட்டி விட்டாலும், குரங்கு விடாப்பிடியாக வகுப்பில் கலந்து கொள்வதாக பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது. அதேவேளை, யாரையும் இதுவரை குரங்கு தாக்கி ஊறு விளைவிக்கவில்லை என்கின்றனர். இது தொடர்பாக வனத்துறை அலுவலர்களிடம் புகார் அளித்ததாக கூறிய பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் சுகலதேவ் யாதவ், வனதுறை அலுவலர்கள் பள்ளிக்கு வருகை தந்து குரங்கை பிடிக்க முயற்சித்த போது அது தப்பிவிடுவதாக கூறுகின்றார்.இந்த சுவாரசிய சம்பவம் அப்பகுதியினரை மட்டுமல்லாது இணையவாசிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.