Others
நாரவாரி குப்பம்– திட்ட பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரி குப்பம் பேரூராட்சியில் திரு. வி. கா. தெருவில் உள்ள பூங்கா மற்றும் மழை நீர் கால்வாய் பணிகள். சோத்துப்பாக்கம் சாலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகியவற்றின் செயல்பாட்டை மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார் .
தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பையை தரம் பிரிப்பது எப்படி என்று கேள்வி கேட்டு பணியாளர்கள் அதற்கு உரிய விளக்கம் அளித்தனர்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர். கண்ணன் பேரூராட்சி தலைவர் . தமிழரசி குமார். துணைத் தலைவர். விப்ர நாராயணன் செயல் அலுவலர் பாஸ்கரன் தூய்மை பணி ஆய்வாளர் மதியழகன் கவுன்சிலர்கள் சகாதேவன். ரமேஷ் . கார்த்திக் கோடீஸ்வரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள். ஊழியர்கள் உடன் இருந்தனர்