fbpx
Others

நாமக்கல்–மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தேங்கி உள்ள மருத்துவ செலவின தொகையை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் மின்வாரியமின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் குப்பண்ணன் தலைமை தாங்கினார். ஈரோடு மண்டல செயலாளர் காளியப்பன், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு மாவட்ட தலைவர் ராமசாமி, அனைத்து துறை அரசு ஊழியர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  ஆர்ப்பாட்டத்தின் போது காசு இல்லா மருத்துவ சிகிச்சை முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கிளை செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்..

Related Articles

Back to top button
Close
Close