fbpx
Others

தொழில் நிறுவனங்கள் பெயர் பலகை தமிழில் வைக்கவேண்டும்

  1. புதுச்சேரி பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் ‘தமிழை தேடி…’ என்ற தலைப்பில் உலக தாய்மொழி நாளான வருகிற 21-ந் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரப்புரை பயணத்தை சென்னையில் இருந்து தொடங்க உள்ளார். இந்த பயணம் வருகிற 23-ந் தேதி புதுச்சேரி வர உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணியளவில் கம்பன் கலையங்கரத்தில் தொழில் நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்கவேண்டும் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார். புதுச்சேரியில் அந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கவுண்டன்பாளையத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் வடிவேலு, மதியழகன், வன்னியர் சங்க மாநில தலைவர் துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறுகையில், ‘அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தமிழ் மொழியை முன்னிலை படுத்த வேண்டும். தமிழை தவிர மற்ற மொழிகளை கற்பது தவறு இல்லை. தமிழையும் கட்டாயம் படிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் வைக்கவேண்டும்’ என்றார். 

Related Articles

Back to top button
Close
Close