தேனி-மேல்மங்கலம்– உலக தாய்ப்பால் வார விழா .
GreetingsfromIndian Red Cross Society,Theni District.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உலக தாய்ப்பால் வார விழா மேல்மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தென்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இரண்டு மையங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வருகை தந்தகர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்ப கால பராமரிப்பை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், குழந்தைகளின் பிறப்பு எடை, 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியம்,மருத்துவமனையில் பிரசவம் மேற்கொள்ள வேண்டியதின் அவசியம், மகப்பேறு உதவித்திட்டங்கள், தாய்ப்பாலின் அவசியம் மற்றும் நன்மைகள், இணை உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ரெட் கிராஸ் உறுப்பினர்கள் திரு.கண்ணபிரான், திரு.சுந்தர் மற்றும் ஏகம் பவுன்டேஷன் சைமன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக் கவசங்கள் வழங்கினர்.