Others
தேனி–மின்மாற்றியினை 10 MVAலிருநது 16 MVAக்கு தரம் உயர்த்திய– செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் (காணொலி காட்சி வாயிலாக) எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஊராட்சி ஒன்றியம் அணைக்காரப் பட்டி துணை மின் நிலையத்தில் செயல்படும் மின்மாற்றியினை 10 MVAலிருநது 16 MVAக்கு தரம் உயர்த்தி மின்மாற்றியின் செயல்பாட்டினை தொடக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் அவர்கள் துணை மின் நிலையத்தினை நேரில் பார்வையிட்டு மலர் தூவினார் உடன் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நேர்பார்வை பொறியாளர் சகாயராஜ் உள்ளார்