தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்துடன் கோரிக்கை மனு.
தேனி மாவட்டம் தேனியில் 08/11/2023 இன்று காலையில் தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சார்பாக நகர பொது செயலாளர் சிவராம் ஜீ தலைமையில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி சிந்து அவர்களிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.அந்த மனுவில் தேனி மாவட்டத்தில் உள்ள பல அரசு கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் சேதமாகி வருகிறது இதன் காரணமாக மனித உயிர் இழப்புகள் வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது , எனவே மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தும் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்களை ஆய்வு செய்து அதன்உறுதி தன்மையை நிரூபனம் செய்ய வேண்டியும்,மிகவும் பழுதான கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்களை கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டதன் நிகழ்ச்சி………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி