தேனி மாவட்ட ஆட்சியரின் தனி கவனத்திற்க்கு..?
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பயணியர் நிழற்குடையில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது சம்பந்தமாக நாம் ஏற்கனவே செய்திகள் தேனி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம், முதலமைச்சர் தனிப் பிரிவு ஆகிய இடங்களுக்கு நம் அரசு செய்தியிலும் கட்அவுட்கள்கலாச்சாரத்தைப்பற்றிதெரிவித்திருந்தோம். ஆனால் இவையெல்லாம் கண்டு கொள்ளாமல் இன்று 07/09/2023 மீண்டும் மீண்டும் அதே இடத்தில் மத்திய ஆளுங் கட்சியின் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன…. இவையெல்லாம் நகராட்சி நிர்வாகம் அனுமதி பெறாமலும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதமாக உள்ளது…..இவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுப்பார்களா என இப் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்…… இதேபோல் அடிக்கடி அனுமதி பெறாமல் கட்அவுட்கள் வைக்கப் படுகின்ற கலாச்சாரத்தினை அரசு த்துறையினரே மதிக்க தவறுகின்றனர்…………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி