மோடியை எதிர்க்க தொடங்கிய எடப்பாடி…? திடீர் கடிதம்!
Chief minister edapaddi palanisamy sends letter to PM Modi
சென்னை:
விவசாய பணிகளுக்காக வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
2021ம் ஆண்டு முதலாக அனைத்து விவாசியிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்து இருந்தது. இது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.