fbpx
Others

தேனி மாவட்டம் – போடிCPSஒழிப்பு இயக்கம் சார்பாக – நீதி கேட்டு நெடுபயணம்

போடி அரசு மருத்துவமனையில் முன்பாக CPSஒழிப்பு இயக்கம் சார்பாக நீதி கேட்டு நெடுபயணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.,போடி அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை நடைபயணமாக போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர் .

முன்னதாக 01.04. 2003 முதல் மாநில அரசு புதிய ஓய்வு திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தினால் எவ்வித பலனும் இல்லாத நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட கோரியும் ஓய்வு பெற்றவர்களுக்கும் பணியின் போது இறந்தவர்களுக்கும் பணிக்கொடை வழங்கிட கோரியும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு கால வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கோரியும் கேடு விளைவிக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்திடக் கோரியும் பஞ்சாப் சண்டிகார் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் புதியஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்தது போல் தமிழகத்திலும் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்யக் கோரியும் பங்களிப்பு ஓய்வூதிய சட்டத்தின் படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநில அரசு மேற்கொள்ள கோரியும் அரசு மருத்துவமனையின் முன்பாக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து நடை பயணமாக தேனியை நோக்கி புறப்பட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close