fbpx
Others

*தேனி மாவட்டம் தேனியில் அயர்ந்து தூங்கும் நெடுஞ்சாலை துறை…???

சின்னமனூர் பைபாஸ் சாலைகளில் திடீர், திடீரென அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்…! ஒவ்வொரு பேக்கரிகளுக்கும் இரண்டு வேகத்தடைகளை கொடுத்த நெடுஞ்சாலைத் துறைக்கேற்றார் போல, நெடுநாள் மௌனம் பைபாஸ் சாலைகளில் தொடர்வது ஏனோ…! தேனி மாவட்டத்தில் சின்னமனூர் டூ கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக, பைபாஸ் சாலையில் பணம் மற்றும் படைபலம் படைத்து, சட்டத்தை தங்கள் சட்டை பையில் வைத்து திரியும் அதிகாரத்திற்கும் அதிகாரிகளுக்கும் கட்டுப்படாத சில தனி நபர்கள்,நெடுஞ்சாலை துறையின் இடங்களை நெடுஞ்சாலைத் துறையின் இடம் என தெரிந்தே ஆக்கிரமித்து கற்கால்களை ஊன்றி, கம்பி கேட் அமைத்தும், மேற்கொண்டு சில இடங்களில் மூடப்பட்ட தகரக்கொட்டகை மற்றும் திறந்த வெளி தகரக்கொட்டகை அமைத்தும்,எனதாக, நெடுஞ்சாலை துறைக்கு சம்பந்தப்பட்ட இடங்களை பகிரங்கமாக ஆக்கிரமிப்பு செய்து வரும் நடவடிக்கைகளில் சில தனிநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேற்கண்ட ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பிரதான சாலையில் அமைந்துள்ள இடங்களை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் அலுவல் நிமித்தமாக அங்கும் இங்கும் செல்லும்போது நெடுஞ்சாலைத் துறையினரின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் கண்களுக்கு தென்படவில்லையா? மாறாக, தெரிந்தும், “நமக்கேன் வம்பு” என கண்டு(ம்) கொள்ளாமல் கடந்து சென்று வருகிறார்களா? என தமிழ்நாடு சமூகநல பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பினர் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.மக்கள் வரிப்பணத்தில் நெடுஞ்சாலை துறை எனும் துறையை உருவாக்கி அந்த துறையினருக்கு மேல் மட்டம் தொடங்கி கீழ் மட்டம் வரை சம்பளம் கொடுத்து வரும் சாமானிய மக்கள், துறையின் ஆக்கிரமிப்புகளை வழக்காடு மன்றம் வரை சென்று,சாமானிய மக்களது வரிப்பணத்தில் தான் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால் மக்கள் வரிப்பணத்தில் இந்த துறை செயல்படுவது எவ்விதத்தில் நியாயம்…?நெடுஞ்சாலை துறையின் இடங்களை ஊரான்களுக்கு ஊட்டி கொடுப்போம்… தங்களது வருமானம் தானாய் பெருகும் என்ற எண்ணமோ/திட்டமோ நெடுஞ்சாலைத் துறைக்கு…?  *அதுசமயம், இது சம்பந்தப்பட்ட தேனி மாவட்ட நெடுஞ்சாலை துறையினர் தாமாக முன் வந்து தேனி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் குறிப்பாக, பைபாஸ் சாலைகளில் ஆக்கிரமித்துள்ள நெடுஞ்சாலைத் துறையின் இடங்களை போர்க்கால அடிப்படையில் கைப்பற்றி தங்களது வசம் வைத்துக் கொள்ள முனைப்பு காட்டிட வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள், மற்றும் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பினர் தேனி மாவட்ட நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்……………………. யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், ஆல் இந்தியா மீடியா கம்யூனிகேஷன், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close