fbpx
Others

தேனி மாவட்டம்—உத்தமபாளையம்..கவன ஈர்ப்புஆர்ப்பாட்டம்

உத்தமபாளையத்தில் தலித் கிறித்தவர்களை SC பட்டியலில் இணைக்க வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

உத்தமபாளையம்: ஆகஸ்ட் : 10 தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தலித் கிறித்தவர்களை எஸ்சி பட்டியலில் இணைக்க வலியுறுத்தி பேரருள் தந்தை ஜெரோம் எரோணி முஸ்அடிகளார் அவர்கள் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. தேனி மறைவட்ட அதிபர் அருள் தந்தை எம் எஸ் முத்து, அறிவர் ரவிச்சந்திரன், மற்றும் அனைத்து பங்கு தந்தையர்கள், CSI அனைத்து குருமார்கள் முன்னிலை வகித்தனர். தொடக்க உரையாக அருள் தந்தை எம் சந்தியாகப்பர் தொடக்க உரை நிகழ்த்தினார். மேலும் தலைமை உரையாக பேரருள் தந்தை ஜெரோம் எரோணி முஸ் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். விடுதலை சிந்தைகள் கட்சி மாநில துணைத் செயலாளர் தோழர் வன்னி அரசு ஆர்ப்பாட்டத்தில் எழுச்சி உரை நிகழ்த்தினார்.ஆர்பாட்டத்த்தின் நெறியாளுகை தோழர் வள்ளுவன்.இந்த போராட்ட்தின் வாயிலாக இந்து, சீக்கிய, புத்த மதத்தை சார்ந்ததலித் மக்களைப் போல் மற்ற மதத்திலுள்ள அனைத்து தலித்துகளையும் Sc பட்டியலில் சேர்க்க வேண்டும். தலித் மக்கள் மதம் மாறினாலும் எஸ்சி அந்தஸ்து தொட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எஸ்சி உரிமைகளை மதம் மாறியவர்களுக்கு மறுக்கும் 1950 ஆண்டு ஜனாதிபதி ஆணை 3 வது பத்தியை நீக்க வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் பெர்க்மான்ஸ், எல்டி பிஐ மாவட்டத் தலைவர் அபுபக்கர் சித்திக், நீதிக்கான மக்கள் இயக்கம் EMS அபுதாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டனர் சதீஸ்குமார் நன்றி உரையாற்றினார் .

Related Articles

Back to top button
Close
Close