பெரியகுளம் பகுதியில் தொடர் கனமழையால் வெள்ள பெருக்கு வீடுகள் இடிந்து சேதம்
தேனி மாவட்டம்.18. பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அருவி, ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது இந்நிலையில்- வடகரை
பட்டா புளித்தெருவில் மதனா என்பவர் வசிக்கும் வீடு நேற்று பெய்த மழையில் இடிந்துவிழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை மேலும் வீட்டை இழந்தவருக்கு அரசு வருவாய் துறை மூலம் நிவாரணம் வழங்கி உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.