fbpx
Others

தேனி-போடி அருகே முன்னாள் முதல்வர்.எம்ஜிஆர் 107 வது பிறந்த நாள் விழா.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சாலிமரத்துப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அவைத்தலைவர் பத்ரகாளிபுரம் முத்துராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் டொம்புச்சேரி ராஜ்குமார் மற்றும் குருஞானதேசிகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிளை பொறுப்பாளர்காளிமுத்துவரவேற்றார் அஇஅதிமுக அமைப்பு சாரா அணியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் குறிஞ்சிமணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.பின்பு பஸ்நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு அதிமுக வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிளை அவைதலைவர் ஆண்டி, இனை செயலாளர் முனியம்மாள் துணைச் செயலாளர் ராஜா, பொருளாளர் தினேஷ், கிளை மகளிர் அணி செயலாளர் முனியம்மாள், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டியராஜ் ,இளைஞர் அணி செயலாளர் அய்யனார் ,அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுருளி, விவசாய அணி செயலாளர் ராஜகிளியன் , மாணவரணி செயலாளர் பாண்டீஸ்வரன், இலக்கிய அணி செயலாளர் ஆறுமுகம், உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .போடி அருகே சாலிமரத்துப்பட்டி கிராமத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அமைப்பு சாரா அணியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் குறிஞ்சிமணி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய போது எடுத்த படம் .அருகில் ஒன்றிய நிர்வாகிகள் பத்ரகாளிபுரம் முத்துராஜ் டொம்புச்சேரி ராஜ்குமார் உட்பட பலர் உடன் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close