fbpx
Others

தேனி–போடி அருகேசாலை விபத்து —— 07.10.2022

போடி அருகே இரணம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தவச்செல்வம் சாலை விபத்தில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலி

போடி அருகே இரணம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தவச்செல்வம் ( 43 வயது ) இவருக்கு பாப்பு என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன நேற்று மாலை போடிக்கு வந்துவிட்டு ஹெல்மெட் அணியாமல் தனது இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊரான கோனம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தபோது ராசிங்கபுரம் சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் ஆடுகளை ஏற்றி வந்த போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து ஆடு குதித்து தவச்செல்வம் இருசக்கர வாகனத்தில் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்ட து உடனடியாக அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து காண விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி தவச்செல்வம் பலியானார் இச்சம்பவம் குறித்து போடி புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இருசக்கர வாகனத்தில் ஆட்டை ஏற்றி வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்  ( எம் பாண்டியன் அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் )

Related Articles

Back to top button
Close
Close