தேனி — போடிநாயக்கனூர் நகர்— அங்கன்வாடி ஊழியர்கள் மெத்தனம்….?
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் பகுதியில் 31 வதுவார்டு பகுதியில் இருக்கும்
அங்கன் வாடியில் சுமார் 20 குழந்தைகள் மேல் உள்ளன. குழந்தை கிழே விழுந்து இரத்த காயத்தயத்துடன் இருந்த நிலையில் முதலுதவி செய்யாமல் அங்கன் வாடி ஊழியர்கள் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.பெற்றோர்கள் ஏன் குழந்தைகளை நல்ல முறையாக கவனிக்க முடியவில்லை என்று பெற்றோர்கள் கேட்டதற்கு நல்லாத்தான் பார்க்கிறோம் என்று மெத்தனமாக அங்கன்வாடி ஊழியர்கள் கூறி வருகின்றனர் மேலும் கீழ விழுந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டும் முதலுதவி செய்யாமல் அங்கன் வாடி ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்காமல் மெத்தனமாக பதில் கூறுகிறார்கள்.இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் மிகவும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.அது மட்டும் இல்லாமல் அங்கன்வாடி கட்டிடம் பாழடைந்த நிலையிலும்,பாது காப்பாற்ற நிலையிலும் உள்ளது.இதனால் அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.