தேனி–பெரியகுளம் புதிய பஸ் நிலைய பிரிவில், சாலையோரம் ஆக்கிரமிப்புகளை அகற்றமுடியாத நிர்வாகம்..?
தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பஸ் நிலைய பிரிவில், சாலையோரம் ஆக்கிரமிப்புகள் செய்து, பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதாலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்க்கிங் செய்வதாலும்,பஸ்கள்முறையின்றிநிறுத்தப்படுவதாலும், பொதுமக்கள் நிற்பதற்கு நிழற்குடை இல்லாததாலும், பொதுமக்கள் சாலைகளில் நிற்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு , காயம் மற்றும் உயிர்ப்பலிகள் ஏற்படுகின்றது.இது போன்ற சம்பவத்தை ஏற்கனவே அரசு செய்தியில் வெளியிட்டும், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போக்குவரத்துக் காவல் துறையினரும் சரியான நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன… இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்… நடவடிக்கை எடுப்பார்களா???……………….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.