தேனி -பெரியகுளம் அருகே குள்ளபுரத்தில் மக்கள் குறைதீர்கூட்டம்
தேனி மாவட்டம்பெரியகுளம் அருகே குள்ளபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது
பெரியகுளம்: ஜுன் : 13:தேனி மாவட்ட பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் ரேஷன் கடையில் இன்று பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் சிறப்பு முகாம் இன்று தமிழக அரசு அறிவித்தபடி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு பெரியகுளம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன்,ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த சிறப்பு முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் விண்ணப்ப மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும். நியாயவிலை கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும். மேலும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியும் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.