Others
தேனி பத்திரிகையாளர் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் !
தேனி.ஜுன். 16- தேனி மாவட்டம் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக ஊட்டியில் நடைபெறும்தேசிய மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முதல் நிகழ்வாக நமது சங்க பத்திரிக்கையாளர் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது 2).மாநாடுக்கு தேவையான நமது பங்களிப்பையும் நமது சங்கத்தின் சிறப்புகளையும் எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.(3)நிர்வாகிகள் அனைவருக்கும் சங்க அடையாள அட்டை வழங்கப்பட்டது(4). தேசிய மாநாட்டில் தேனியில் இருந்து அதிக அளவில் பங்கு பெற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப் பட்டது.