தேனி–நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்….சிறப்பு செய்தி.
தேனிமாவட்டம் டிச 02 போடி ஜமீன்தாரின் காமுலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் போடி நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி நிலவேம்பு குடிநீர் வழங்கினார் உடன் நகராட்சி பணியாளர் கார்த்திக் மற்றும் பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர். { 2 ) போடிநாயக்கனூர் நகர்மன்ற தலைவர் திருமதி-ராஜராஜேஸ்வரி அவர்கள் மற்றும் போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ராஜலட்சுமி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி பகுதிகளில்காய்ச்சல் கண்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது மேலும் முன்னெச்சரிக்கையாக நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியர்களுக்கு நகராட்சி சார்பாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இன்று ஜமீன்தாரணி காமுலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ- மாணவியர் :(1033)நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது