fbpx
Others

தேனி தாலுகாவட்ட வழங்கல் அலுவலகத்தில் என்னநடக்கிறது.?

தேனியில் 26/10/2023 இன்று மாலை தேனி தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் வயதான பெரியவர்களால் குடிமைப் பொருட்களை நடந்து சென்று வாங்க முடியாத காரணத்தால்  நியமனம் செய்யப்படுகின்ற படிவங்களை சமர்ப்பிக்க வருகின்றவர்களை ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி தட்டிக் கழித்து வருவதுடன், முறையாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்லக்கூட அலுவலகத்தில் ஆளில்லை….பொ.க.பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் சுரேஷ் குமார் என்பவரும், தேனியைச் சேர்ந்த இயக்குநர் ராமமூர்த்தி , தேனி குமார் என்பவர்களும் இது போன்ற காரணங்களால் பல முறை அலைந்தும் இவைகளுக்கு எவ்வித தீர்வுகள் கிடைக்காமல் தங்களின் வேலைகளையெல்லாம் தவிர்த்து இதற்காக அலுவலகம் அலைந்த வண்ணம் இருக்கின்றனர்!!! நன்கு படித்து விவரமானவர்களுக்கே இந்த நிலைமை என்றால் படிக்காத பெரியவர்களின் நிலை என்ன? என்று பொதுமக்கள் பேசுவது நன்கு தெரிகிறது ??? இவற்றை உடனடியாக மாவட்ட ஆட்சியரும், வட்டாட்சியரும் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் ???  ………………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close