RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
சென்னையில் உயர்ந்தது தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ.504 உயர்வு !!
தொடர்ந்து சில காலமாக தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.504 உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தங்கத்தின் விலையானது 504 ரூபாய் உயர்ந்ததால் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 26 ஆயிரத்தி 232 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல் ஒரு கிராமானது 63 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்தி 279 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 40 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் பார் வெள்ளியானது ஒரு கிலோ 300 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்தி 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.