தேனி —டாஸ்மாக் ஊழியர்கள் பாதுகாப்பு கோரி ஆர்பாட்டம்
தேனி மாவட்டத்தில் தொடரும் டாஸ்மாக் ஊழியர்கள் மீதான கொலைவெறி தாக்குதல்கள் பாதுகாப்பு கோரி ஊழியர்கள்
தேனி மாவட்டத்தில் உள்ள எரசக்கநாயக்கனூர்,டொம்புச்சேரி கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக பணிபுரிபவர்கள் முறையே பெரியசாமி,கருப்பையா இவர்கள் கடந்தவாரத்தில் பணிமுடித்து ஊர்திரும்பும்பொழுது பணத்தை பறிக்கும்நோக்கில் சமூகவிரோதிகள் கொலைவெறி தாக்குதல்கள் தொடுத்துள்ளனர்.இதனால் படுகாயமடைந்த பெரியசாமியும்,கருப்பையாவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வேண்டி தேனி காமராஜர் பேரூந்து நிலையம் அருகே சிஐடியு சங்கத்தினர் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் வி.மோகன் தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் ராமச்சந்திரன் கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஜி.சண்முகம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்..