தேனி–கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்.
தேனிமாவட்டம் நவ 23 மாவட்ட ஆட்சியர் கூட்ட ரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.வி.சஜீவனாஇ.ஆ.ப.100மாணவ,மாணவிகளுக்கு கல்விக் கடன் ரூபாய் 4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்விகடன் உதவிகள் இந்த கல்வி கடன் முகாமில் பொறியியல் கல்லூரி மருத்துவக் கல்லூரி தோட்ட வேளாண்மை கல்லூரி கால்நடை மருத்துவக் கல்லூரி கலை அறிவியல் கல்லூரி என அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் 400 மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக தேனி மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் மேலாளர்கள் முகாமில் கலந்துகொண்டு மாணவ மாணவிகள் இணைதளத்தின் மூலம் சுலபமாக கல்விக் கடன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான பணிகள் மற்றும் வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு கடன் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர் இம் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜெயபாரதி தனித்துணை ஆட்சியர்( ச.பா.தி) ஜி. முரளி முன்னோடி வங்கி மேலாளர் கே .சந்திரசேகர் உதவி பொது மேலாளர்கள் சி. தனபால்( பாரத ஸ்டேட் வங்கி) எஸ்.பி. தாமோதரன் (கனரா வங்கி) கனரா வங்கி மார்க்கட்டிங் மேலாளர் மகாலட்சுமி ஊரக வங்கி கடன் பயிற்சியாளர்(கனரா வங்கி) ரவிக்குமார் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இந்தியன் வங்கி. சென்ட்ரல் வங்கி. ஆக்சிஸ் வங்கி.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.