தேனி-கம்பம்–பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி—செய்தி
தேனிமாவட்டம்கம்பத்தில் ரோட்டரி கிளப் சார்பில் இன்று காலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியைகலெக்டர் துவக்கி வைத்தார்.தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று 26/08/2023 காலை கம்பம்வேலி ரோட்டரி கிளப் மற்றும் மாவட்ட நிர்வாகம்,அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது,இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் வேல்பாண்டியன் வரவேற்றார். தேனி மாவட்ட கலெக்டர் ச.அ. ஷஜீவனா தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கம்பம் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன்,கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், ரோட்டரி கிளப் திட்டஇயக்குநர் கர்ணன், நாராயண குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்தமபாளையம் ஆர்டிஓ பால்பாண்டி, ரோட்டரி கிளப் திட்டஇயக்குநர் கர்ணன்,நாராயண குமார் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். ஊர்வலம் கம்பம் காந்தி சிலை அருகே தொடங்கி போக்குவரத்து சிக்னல், ஏகேஜி திடல் வழியாக தம்பிஸ் அருகே நிறைவுற்றது…………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.