குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..! சிபிஎஸ்இ அறிவிப்பு!
CBSE announcement over exam
டெல்லி:
குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 30 சதவீதம் குறைக்கப்பட்டது. இந் நிலையில் இந்த பாடக்குறைப்பு இந்த ஆண்டு மட்டுமா அல்லது வரும் ஆண்டுகளில் தொடருமா என்ற கேள்வி எழுந்தது.
இதனை அடுத்து சிபிஎஸ்இ அளித்துள்ள விளக்கத்தில் 9 முதல் 12 வகுப்புகளுக்கான பாடங்கள் 30% குறைப்பது என்ற முடிவு 2020-21 கல்வி ஆண்டு மட்டுமே பொருந்தும் என்றும் மற்ற ஆண்டுகளுக்கு பொருந்தாது என்றும் அறிவித்துள்ளது
இந்த கல்வி ஆண்டின் மாதங்கள் மிகவும் குறைவு என்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இந்த ஆண்டு மட்டுமே இந்த பாடக்குறைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது
குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது, என்சிஇஆர்டி முன்மொழிந்துள்ள மாற்றுக் கல்வி நாட்காட்டி திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.