fbpx
Others

தேனி–ஆண்டிபட்டி தாலுகா,பந்துவார்பட்டியில் நடப்பது என்ன…?

தமிழ்நாடு – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா,பந்துவார்பட்டியில் ஒரு குறிப்பிட்ட நபர்கள் யூனியன் அலுவலகத்தில் அனுமதி பெறாமல் செய்கின்ற அராஜகம்!!! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள பந்துவார்பட்டியில், இந்த பகுதி வார்டு உறுப்பினர் துணையோடு ஒரு சில நபர்கள் யூனியன் அலுவலகத்தில் அனுமதி பெறாமல் பொது மக்கள் குடிக்க பயன்படுத்த போடப்பட்ட குடிநீர் குழாயினை அவரவர்களின் இஷ்டம் போல குடிநீர் குழாய்களை யூனியன் அலுவலகத்தில் அனுமதி பெறாமல், இது என் தனிப்பட்ட சொந்த குழாய், இவற்றில் யாரும் தண்ணீர் பிடிக்கக் கூடாது, என்று அராஜகம் செய்து வருகின்றனர்………. மேலும் இந்த வழியில் சென்று கொண்டிருந்த ஓடையில் ஆர்.சி.சி அமைத்து வீடு கட்டிக் கொண்டு என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அருகில் குடியிருக்கும் கனகராஜ் மற்றும் தர்மராஜ் – (வார்டு உறுப்பினர்)என்ற இரண்டு பேரும் பக்கத்தில் குடியிருக்கும் ஆறுமுகம் என்ற வயதான முதியவரை கீழே தள்ளி விட்டு தகாத முறையில் பேசி தேவையற்ற கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி , உன் கழுத்தை திருகி, உன்னை துண்டு துண்டாக நறுக்கி வீசி விடுவேன் என்று மிரட்டியுள்ளனர்……. இவர்கள் என்ன பெரிய ரவுடியா ? இது போன்ற தேவையற்ற பிரச்சினைக்கு உடன் மாவட்ட காவல் துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.? …………………. நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் இதைப் பொருட்படுத்தாது ஆக்கிரமித்து வீடுகள் கட்ட அனுமதி கொடுத்தது யார்?…. பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்தால், அதை தான் அமைத்த குழாய் என்று கூறி அராஜகம் செய்து போடப் பட்ட குழாயை மாற்றம் செய்ய அனுமதி கொடுத்தது யார்? ஊருக்குள் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மார்தட்டிக் கொண்டு…….எந்த தைரியத்தில் இவற்றை செய்கின்றனர்…. இவற்றை திருமலாபுரம் யூனியன் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை நிர்வாகமும் உடனடியாக உரிய முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்……… உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா???………….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி..

Related Articles

Back to top button
Close
Close