Others
தேனி –அல்லிநகரம்நகராட்சிப்பகுதி 14 வது வார்டு உடன் சீர் செய்யுமா..?
தேனி அல்லிநகரம்நகராட்சிப்பகுதி 14 வது வார்டில் சிவராம் நகர் மெயின் ரோட்டில் சாக்கடையை அள்ளாமல் சாக்கடை நீர் மெயின் ரோட்டில் பாய்ந்து செல்கிறது, சிவராம் நகர் – பெத்தனாட்சி மகால் செல்லும் ரோட்டின் சந்திப்பில் வீடுகள் முன்பாக கழிவு நீர் செல்லும் சாக்கடையே இல்லை… நகராட்சித் துப்பரவு பணிகள் நடப்பதே இல்லை… இந்த பகுதியில் கவுன்சிலர் உறங்கிக் கொண்டு இருக்கிறாரா? நகராட்சியின் வரிகள் வசூலில் தீவிரம் காட்டும் அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் நடக்கின்ற பணிகளில் ஏற்படும் குறைகளையும் சரிசெய்திட வேண்டும்…. இந்த குறைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு சீர் செய்திடுமா நகராட்சி நிர்வாகம்…..?