தேனி – அல்லிநகரம்நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும்மவுனம் ஏன்.?
தேனி மாவட்டம் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கம்போஸ்ட் ஓடைத்தெரு – வள்ளி நகர் சாலை சந்திப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் போடப் பட்ட கழிவுநீர் செல்லும் சந்திப்பின் மேல் கட்டப்பட்ட பாலம் அருகில் உள்ள சாலையில் கோழிக்கடையினை வைத்து, கோழிகளின் கழிவுகளை இந்த பாலத்தின் கீழே செல்லும் கழிவுநீர் சாக்கடையில் கொட்டப்பட்டுகிறது. இந்த சம்பவத்தை வார்டு உறுப்பினர் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்???….. இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யவில்லை என்றால் கழிவுநீர் செல்லும் சாக்கடை முழுவதும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாக்கடையில் செல்லாமல் சாலையில் செல்லும் நிலை ஏற்படும்…. இவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறை நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதியின் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்..???…………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி