தேனியில் CPS ஒழிப்பு இயக்கத்தின் பட்டினிப் போராட்டம்…?
தேனி மாவட்டம் தேனியில் 02/12/2023 காலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக CPS ஒழிப்பு இயக்கம், தேனி மாவட்டம் சார்பாக, (1)தி.மு.க – வின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் – 309 ன் படி தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின்வாழ்வாதாரஉரிமையானபழையஓய்வூதியத்திட்டத்தைநடைமுறைப்படுத்திடவும், (2) CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்க வலியுறுத்தியும், (3) சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக உண்மைக்கு மாறாக தமிழக முதல்வர் அறிவித்ததை எதிர்த்தும், குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் மு.விஸ்வநாதன் தலைமையில், மு. பிரசாத் குமார் முன்னிலையில், ஜெ.குபேந்திர செல்வம் துவக்க உரையுடன், சே.முகம்மது ஆசிக் விளக்கவுரையுடன் இப் பட்டினிப்போராட்டம் நடைபெற்று வருகிறது………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.