Others
தேனியில் இன்று 11/08/2023 மாலை பேய் மழை கொட்டித் தீர்த்தது…
தேனி – மதுரை சாலையிலும், தேனி பழைய பேருந்து நிலையம் மற்றும் பெரியகுளம் சாலையிலும் மழை வெள்ளப் பெருக்கெடுத்து மழைத் தண்ணீர் கால்வாய்களில் செல்வதற்கு பதிலாக சாலைகளையும், பேருந்து நிலையத்தையும் வெள்ளநீர் ஆக்கிரமித்து கொண்டது….. இதற்கு முக்கிய காரணமே தேனியில் செல்லும் இராஜ வாய்க்கால் தான்…… ஏனெனில் மழைநீர், கழிவு நீர் தங்குதடையின்றி செல்லும் இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமித்து வீடுகளைகட்டி குடியிருந்து வருவதாலும், கழிவு நீர் வாய்க்கால்களை தூர் வாராததாலும் தான் தேனி யின் நிலைமை இந்த மோசம்….. இதற்கு தேனி நகராட்சியின் மெத்தனப்போக்கே காரணம்…. இனியாவது நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா…? என்று தேனி நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி