fbpx
Others

தேனிமாவட்ட நிர்வாகம் அலட்சியபோக்கா…? விடிவு எப்போது.?

தேனிமாவட்டம்தேனியில்பெரியகுளம் சாலை மற்றும் இடமால் தெரு சந்திப்பு வார்டு – 25 க்கு உட்பட்ட இந்த சந்திப்பில் கழிவுநீர் வாய்க்கால் மிகவும் சிதிலமடைந்தும், இவ்வழியாக பாதசாரிகள் நடந்து செல்ல முடியவில்லை, ஏனெனில் இந்த பகுதியில் இருபக்கமும் சாலையில் கடைகள் போடப்பட்டு உள்ளது…. நடப்பதற்கே சிரமப்பட்டு செல்லும் இந்த சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகளும், ஆட்டோக்களும் இந்த பாதையில் ஆக்கிரமித்து கொள்வதால் இவ்வழியாக நடந்து செல்லவே முடியாது பொது மக்கள் அல்லல்படும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது…. இந்த பகுதியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால், மற்றும் சாலையோர கடைகளால் என்றைக்கு விடிவுகாலம் பிறக்குமோ ? இந்த அவலநிலையை தேனி நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும்,[ ஆட்சியர் ] உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா அல்லது செவிடன் காதில் ஊதும் சங்கு போல கண்டும் காணாமல் விட்டுவிடுவார்களா ??? என இப் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் !!!……………………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close