தேனிமாவட்டம் பெரியகுளம்–தேசிய மக்கள் நீதிமன்றம்—செய்தி
தேனிமாவட்டம் பெரியகுளம் சட்ட ப்பணிகள் குழு சார்பில் 13/05/2023 தேதிகளில் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது இதில் பெரியகுளம் சட்டப்பணி குழு தலைவரும் சார்பு நீதிபதிமான பொறுப்பு திரு K.மாரியப்பன் அவர்களும் நீதித்துறை நடுவர் திரு கமலநாதன் அவர்களும் பெரியகுளம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் T.அம்பாசங்கர் செயலாளர் V.ராமசுப்பிரமணி பெரியகுளம் வழக்கறிஞர்கள் சட்டப் பணிக்குழு வழக்கறிஞர் திரு.S. சுந்தர்ராஜன் அவர்களும் பெரியகுளம் வட்டாட்சியர் கலந்து கொண்டனர் இதில் சொத்து சம்பந்தமான வழக்குகள் காசோலை மற்றும் இதர சம்பந்தமான வழக்குகள் தீர்வுக்கு எடுக்கப்பட்டு சுமார் 146 வழக்குகள் முடிக்கப்பட்டு சுமார் 1,09,42,258/ ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது மேலும் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களுனாக உதவித்தொகைக்கா ஆணையை 10 நபர்களுக்கு நீதிபதிகள் வழங்கினார்கள் இந்த மக்கள் நீதிமன்றம் பணிக்காக ஏற்பாடுகள் பெரியகுளம் வட்ட சட்ட ப்பணிகள் குழு ஏற்பாடு செய்திருந்தனர்.