Others
தீர்த்த கிரையம்பட்டு ஊராட்சி—-செய்தி 17 /11 /22
தீர்த்த கிரையம்பட்டு ஊராட்சி
மழை நீர் கால்வாய் அடைப்புகளை அகற்ற வருவாய் துறை அதிரடி நடவடிக்கை! திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக் கரியப்பட்டு ஊராட்சி விவேக் அக்பர் நகர் பகுதியில் மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மூன்றாவது வார்டு பகுதியில் உள்ள விவேக் அக்பர் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழை நீர் பாதிப்பு ஏற்படாத வகையில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பொக்ளின் இயந்திரம் மூலம் சீரமைத்தனர்.இதில் நில அளவையாளர் குமார் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன் வார்டு உறுப்பினர் நாகஜோதி வாசுதேவன் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.