தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்.
சென்னை செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற 6 வது வார்டு உறுப்பினர் முனைவர் க.கு.தாஸ் தலைமையில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் அன்சர் ஃபாத்திமா ,செயலாளர் ஏ.கே முகம்மது யூசுப், வட்டாரத் தலைவர்கள் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், கா.ஷண்முக சுந்தரம், கோகுல் வைத்தீஸ்வரன், எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ஆர்பிஎஸ் மருத்துவமனை – சென்னை லிவர் பவுண்டேஷன், எம்.என் கண் மருத்துவமனை, செங்குன்றம் ஸ்ரீ சஞ்சனா மருத்துவமனை, எழில் டயாபட்டிக் சென்டர் இணைந்து கல்லீரல் பரிசோதனை முகாம், பொது மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் ஆகியவை நடைபெற்றது..நிகழ்ச்சியை புழல் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.மருத்துவ முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கல்லீரல் பரிசோதனையும் கண் பரிசோதனையும் செய்யப்பட்டது பொது மருத்துவ பரிசோதனையில் கலந்து கொண்டோருக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.இதில் புழல் ஒன்றிய துணை பெருந்தலைவர் சாந்தி பாஸ்கரன், கைலாஷ் நினைவு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பி.என்.கே. கிருஷ்ணன். உள்பட பலர் கலந்து கொண்டனர்.