fbpx
Others

திருவாரூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் நீடாமங்கலம் நகரத்தில் எஸ்பிஐ எல்ஐசி பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் பறிபோவதை தடுக்க கோரியும் ஏழை

எளிய மக்களின் சொத்துக்களை அதானி குடும்பத்திற்கு வாரி வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாக்க கோரியும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ் எம் பி மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வீரமணி அவர்களின் ஆதரவுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி டாக்டர் நிரோஜா கிஷோர் அவர்கள் தலைமையிலும் நீடாமங்கலம் வட்டாரத் தலைவர் பாபு என்கிற மனோகரன் முன்னிலையிலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு பைங்கா நாட்டு சண்முகம் அவர்கள் கண்டனம் முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் மகிலா காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் ஆசிரியர் ராதா அவர்கள் நன்றியுரை ஆற்றினார் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..

Related Articles

Back to top button
Close
Close