Others
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் –(கிருஷ்ணன் கோவில்) செய்தி 20 / 11 / 22
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் (கிருஷ்ணன் கோவில்) 20.11.2022 காலை 6.30 மணியளவில் லெட்சுமி நாராயண பெருமாளுக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைப்பெற்றது அதனை தொடர்ந்து கோவில் தீர்த்தத்திற்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது அதன் பிறகு கோ மாத பூஜை சிறப்பாக நடைபெற்றது பசு மாடு மற்றும் கன்றுகளுக்கு மாலை மற்றும் புது துணி அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது கோ மாதா காமதேனு மந்திரங்கள் உச்சரித்து பூஜிக்க பட்டது மார்கழி மாத பூஜை தினமும் காலையில் நடைபெறும் அனைவரும் கலந்து கொள்ள மற்றும் மாத மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது அனைவரும் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற வேண்டும் என்று ஆன்மிக செம்மல் திரு R S செல்வதுரை வேண்டுகோள் விடுத்தார்