fbpx
Others

திருவாரூர் — நீடாமங்கலம்தேசிய மகளிர் தினம்–கண்டன ஆர்ப்பாட்டம்

08.03.2023 தேசிய மகளிர் தினத்தன்று எல்பிஜி கேஸ் விலை உயர்வை மீண்டும் மீண்டும் உயர்த்தி பெண்களுக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவி டாக்டர் நிரோஜா கிஷோர்

முன்னிலையில் திருவாரூர் மாவட்ட தலைவர் திருமிகு எஸ். எம். பி .துரைவேலன் அவர்கள் தலைமையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் மாலை 6 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு .வே.வீரமணி அவர்கள் கருத்துரை வழங்கினார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பேச்சாளர் திரு தஞ்சை தமிழ்ச்செல்வன் கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு நெடுவை குணசேகரன் மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் திரு கே. பழனிவேல்.மாவட்ட ஐடி ஒருங்கிணைப்பாளர் திரு விஜயபாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு என் சண்முகம் திரு. வடுகநாதன் திரு ஆனந்த சீனிவாசன் மன்னார்குடி சட்டமன்ற இளைஞர் அணி காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. சக்திவேல் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் 100 க்கும் மேற்பட்டோர் மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தேசிய தோழர்களும் பங்கேற்றனர். நிறைவாக நீடாமங்கலம் வட்டார தலைவர் பாபு என்கிற மனோகரன் நன்றி உரை ஆற்றினார். இந்நிகழ்வில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன..

Related Articles

Back to top button
Close
Close